7 வயது சிறுமியை காம இச்சைக்கு இரையாக்கிய கொடூரம்.. நாமக்கல்லில் பயங்கரம்.!!
7 year child sexual abuse police investigation in Namakkal
நாமக்கல் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. நாமக்கல்லில் வசித்து வரும் கூலித்தொழிலாளி மனைவி மற்றும் 7வயது மகளுடன் வசித்து வருகிறார்.
பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தி புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், புகாரை பெற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுக பொறியியல் பட்டதாரி இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
7 year child sexual abuse police investigation in Namakkal