மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை... சிக்கிய தாய்-மகன் உள்பட 5 பேர்.. கோவையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் நகை, பணத்துக்காக மூதாட்டியை கொன்ற தாய்- மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (75). இவர் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முந்தின இரவு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதில் தெய்வானையம்மாளின் கை, தலைப்பகுதியில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயிருந்தது. இந்நிலையில் நகை, பணத்திற்காக யாரோ மூதாட்டியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40), அவரது மகன் சஞ்சய் பழனி (19) மற்றும் அவரது நண்பர்களான இரண்டு பேர் என 4 பேரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல நாட்களாக மூதாட்டியிடம் இருந்து நகை, பணத்தை அபகரிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் பற்றி விவரம் தெரிந்தும், அதை மறைத்து அவர்களுக்கு உதவிய பானுமதி (30) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people including mother and son arrested for killing old woman for jewelry money in kovai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->