படப்பை: பேருந்து மீது லாரி மோதி விபத்து - 5 பேர் காயம்
5 injured in bus lorry accident in padappai
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தாம்பரத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்போருந்தை வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பேருந்து படப்பை பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த கனரக லாரி ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதி சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
5 injured in bus lorry accident in padappai