பொதுமக்கள் கவனத்திற்கு.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
5 districts flood alert warning in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை கன மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5,399 கன அடியில் இருந்து 8,900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
English Summary
5 districts flood alert warning in tamilnadu