47 ஆண்டுகளில் இல்லாத கனமழை! மாநகராட்சி நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரதான சாலைகளில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வரை சென்னையில் 340 மி.மீ. பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த 47 ஆண்டிகள் வரலாற்றில் பெய்யாத கனமழை என்பதும், சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெய்த மழையின் அளவு 340 மி.மீ. என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

47 years of heavy rain Corporation administration information


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->