கேரளாவுக்கு கடத்திய ரூ.40 லட்சம் பறிமுதல்.! வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


பேருந்தில் கேரளாவுக்கு பணம் கடத்திய ரூபாய் 40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரளாவுக்கு பேருந்து மூலம் பணம் கடத்தப்படுவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மதுவிலக்கு ஆய்வாளர் தலைமையில் போலீசார், களியக்காவிளை அருகே உள்ள கொற்றாமம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த தமிழக உயர்ந்த நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பேருந்தில் இருந்த வாலிபரிடம் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த பேக்கில் சோதனை செய்ததில் ரூபாய் 40 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (37) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பாண்டிச்சேரியில் இருந்து திருவனந்தபுரம் பணம் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் பணம் யார் கொடுத்தது என்பது குறித்து எந்த தகவலும் அவர் தெரிவிக்காத நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 lakh smuggled to Kerala by bus seized


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->