லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மணிகண்டன். இவரது மகள் சர்மிளா(4). இந்நிலையில் வழக்கம்போல் பெற்றோர், நேற்று முன்தினம் சர்மிளாவை நரசிங்கபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து சர்மிளா அங்கன்வாடி மையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக, அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சிறுமி சர்மிளா மீது மோதியது.

இதில் சிறுமி சர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 year old Girl died in lorry collision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->