தர்மபுரி அருகே பரபரப்பு: நிலத்தகராறில் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தகராறில் தம்பதியை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு செந்தில்குமார், சண்முகம், சத்யா என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் முனியப்பனின் பூர்வீக சொத்தாக 85 சென்ட்டில், மகள் சத்யாவிற்கு 35 சென்ட் பிரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து மீதமுள்ள நிலத்தை பிரிப்பதில் செந்தில்குமார், சண்முகம், சத்யா ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து சம்பவத்தன்று இரவு செந்தில்குமார் வீட்டின் முன்பு முனியப்பன், கோவிந்தம்மாள், சத்யா, ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதில் செந்தில்குமாரின் மனைவி கவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். 

இதையறிந்த செந்தில்குமார் இதை தட்டி கேட்டபொழுது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா இருவரையும் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, முனியப்பன், கோவிந்தம்மாள், சத்யா மற்றும் சத்யாவின் மகன் கோபிநாத் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 arrested for assaulting couple in land dispute in dharmapuri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->