தமிழகத்தில் 3 ஆவது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
3RD PERSON CORONA POSITIVE IN TAMILNADU
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி 21 வயதான மாணவர் ஒருவர் அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
அவருக்கு நேற்று பரிசோதனை செய்த நிலையில் அதனுடைய முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. முடிவின்படி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சீரான உடல் நிலையுடன் இருப்பதாகவும் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில்சிசிச்ச்சையில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாவது நபர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
3RD PERSON CORONA POSITIVE IN TAMILNADU