சாலையை கடக்க முயன்ற காவலர்.! அதிவேகமாக மோதிய இருசக்கர வாகனம்.! 3 பேர் காயம் - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகன மோதியதில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே காவலர் கார்த்திகேயன் என்பவர் சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று கார்த்திகேயன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த மூன்று பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தனியார் கல்லூரியில் படிக்கும் வெங்கட் மற்றும் அவரது நண்பர் சூர்யா என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செங்கல்பட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 injured in twowheeler accident in Chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->