ஆட்டத்தை துவங்கிய கொரோனா.! விழுப்புரத்தில் 29 வயது இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் பணிபுரிந்து வந்த விழுப்புரத்தை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது உயிரிழந்து இருக்கின்றார். 

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திண்டிவனம் அருகே பெரியசெவலை என்ற கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மும்பையில் இருந்து கடந்த 28ம் தேதி தமிழகம் வந்த சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்த அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனவுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து இருக்கின்றார். எனவே, விழுப்புரம் நகராட்சி மின் மயானமான முக்தியில் காவல்துறை பாதுகாப்புடன் அந்த இளைஞரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு பீதியை கிளப்பி இருக்கின்றது. 

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்து இருக்கின்றனர். முன்னதாக அங்கங்கே 1, 2 என்ற எண்ணிக்கையில் மரணம் நிகழ்ந்து வந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் மீண்டு வந்தனர். ஆனால் தற்போது அடுத்தடுத்த மரணம் நிகழ்ந்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29 years men death by corona in villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->