உலகில் முதல்முறையாக 26 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பஞ்சபூத சிவலிங்கம்: சத்தியமங்கலம் அருகே பிரதிஷ்டை..! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே ஒரே கல்லிலான 26 அடி உயரம் கொண்ட  பஞ்சபூத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தனவாசி பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த கோயில் வளாகத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில்,  20 டன் எடையுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. 

மங்கள கயிலாய வாத்தியங்கள் முழங்க இரண்டு ராட்சத கிரேன்களை மூலம் இந்த 26 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அப்போது, சிவ பக்தர்களின் வழிபாட்டு மற்றும் அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதோடு,  26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத சிவலிங்கத்தை பக்தியோடு வழிபட்டு சென்றுள்ளனர்.

உலகத்திலேயே முதன்முறையாக இக்கோயிலில் தான் 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சிவ பக்தர்கள் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

26 feet Panchabhootha Shivalingam carved from a single stone installed near Sathyamangalam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->