திருவாரூர் : மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகள் கொள்ளை .! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் 250 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் பல லட்சம் மதிப்பிலான பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில்வே நிலையம் அருகே பிரபல குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை பிரேம்குமார் தாஸ் என்பவர் அடக்கி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் படித்து வரும் இவரின் மகளைப் பார்க்க மருத்துவர் பிரேம் குமார் தாஸ் சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி காலை வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இதனையடுத்து உடனடியாக மருத்துவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பீரோவை உடைத்து அதிலிருந்து 250 சவரன் தங்க நகைகளும், பல லட்ச ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

250 savaran gold robbery in thiruvarur doctor house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->