ஏரியில் மூழ்கி 12ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு.!
2 students of class 12 drowned in the lake
ஆவடியில் ஏரியில் மூழ்கி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மகன் சஜீவன் (வயது 17). இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் அருளரசன் (வயது 17) மற்றும் பிரவீன் வெங்கடேசன் (வயது 17) ஆகியோருடன் நேற்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரியில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது சஜீவன் மற்றும் அருளரசன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளவேடு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.
உயிரிழந்த 2 பேரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
2 students of class 12 drowned in the lake