சென்னையில் பிரபல ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.!
2 rowdys kill encounter in chennai
சென்னையில் பிரபல ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.!
சென்னையில் உள்ள சோழவரம் அருகே பூதூர் மாரம்பேடு பகுதியில் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணன் மற்றும் சதீஷை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
அதன் பின்னர், போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த போது அவர்களை தாக்கிவிட்டு ரவுடி முத்து சரவணன் மற்றும் சதீஷ் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இதனால், போலீசார் தற்காப்புக்காக தனது கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் ரவுடியை சுட்டுள்ளனர். இதில் முத்து சரவணனின் உடலில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதேபோல், ரவுடிகள் தாக்கியதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட முத்து சரவணன், சதிஷ் உள்ளிட்டோர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டரில் உயிரிழந்த முத்து சரவணன் மீது காவல் நிலையத்தில், 7 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
2 rowdys kill encounter in chennai