சென்னையில் பிரபல ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பிரபல ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.!

சென்னையில் உள்ள சோழவரம் அருகே பூதூர் மாரம்பேடு பகுதியில் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணன் மற்றும் சதீஷை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

அதன் பின்னர், போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த போது அவர்களை தாக்கிவிட்டு ரவுடி முத்து சரவணன் மற்றும் சதீஷ் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளனர். 

இதனால், போலீசார் தற்காப்புக்காக தனது கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் ரவுடியை சுட்டுள்ளனர். இதில் முத்து சரவணனின் உடலில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதேபோல், ரவுடிகள் தாக்கியதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட முத்து சரவணன், சதிஷ் உள்ளிட்டோர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டரில் உயிரிழந்த முத்து சரவணன் மீது காவல் நிலையத்தில், 7 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 rowdys kill encounter in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->