திருவாரூர் || 15 வயது சிறுமியை பாழடைந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டத்தில் திடீர் திருப்பம்..! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று இரவு கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை தேடிவந்தனர்

இதனிடையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமி மயங்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாழடைந்த வீட்டில் அவர் இருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அந்த சிறுமி தனது காதலனான பொறியியல் மாணவனான சந்தோஷூடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததாகவும் நீண்ட நேரமானதால் மயங்கியது போல நடித்ததாகவும் தெரியவந்தது. காதலுடன் பேசியதை இருந்ததை மறைப்பதற்கு சிறுமி நாடமகாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 year old girl found in dilapidated house


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->