தாயின் கள்ளகாதலனால் மகளுக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 13 வயது மகள் மற்றும் பதினோரு வயது மகனுடன் தனியே வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் அவர்களை விட்டு சென்றதால் அவர் அதே பகுதியை சேர்ந்த பிஸ்வஜித் என்ற நபருடன் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் 13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது அந்த பெண்ணிற்கு தெரிய வரவே அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதற்கிடையில் சம்பவத்தன்று அந்த 13 வயது சிறுமியை இழுத்துச் சென்று பிஸ்வஜித் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 years old girl Raped By Mothers lover


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->