தமிழக மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை.!!
13 Tamil Nadu fishermen released with conditions
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குவதும் சிறை பிடித்து செல்வதும் மீனவர்களின் உரிமைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வரும் நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
![](https://img.seithipunal.com/media/ramesvaram fisher-h96kx.jpg)
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம். மீன்வளத் துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
13 Tamil Nadu fishermen released with conditions