படிக்க சொல்லியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


படிக்க கூறியதால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஷர்மிலி . இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து  வருகிறர. தற்போது 12ம் வகுப்பிற்கான பொது தேர்வு நடந்து வந்ததால் அவரை தாய் படிக்க கூறி திட்டியுள்ளார்.

இதனால், மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th grade student Committed Suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->