சென்னை || சரியாக படிக்கவில்லை என கண்டித்ததால், 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!
11th student Committed Suicide In Chennai
சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம், வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அந்தோணி தினேஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் கவனமில்லாமல் விளையடடு தனமாக இருந்து வருவதால் அவ்வபோது அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவதன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிட தினேஷ் படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை, அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11th student Committed Suicide In Chennai