திருச்சி: அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுப்பட்டி பகுதியில் பேருந்து சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதை அடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 injured in bus accident in Trichy


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->