உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டி.. இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


இந்திய ஆண்கள் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் சார்பில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

அதன்படி, ருத்ராங்க்ஷ் பாட்டீல், அர்ஜுன் பாபுதா மற்றும் கிரண் ஜாதவ் அடங்கிய இந்திய அணி இறுதி போட்டியில் 16-10 என்ற கணக்கில் சீனா அணியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

அதே நேரத்தில் மெஹுலி கோஷ், இளவேனில் வாலறிவன் மற்றும் மேகனா அடங்கிய இந்திய பெண்கள் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஜெர்மனியை 17-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

எகிப்தின் கெய்ரோவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இது 5வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World rifle competition India won 5 gold


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->