உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி.. மகளிர் அணி தங்கம் வென்று சாதனை.! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடைபெற்று வருகிறது.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதல் சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

2வது சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின் தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது.

இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17-5 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவின் தோல்வியைத் தழுவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Cup sniper competition Women's team wins gold


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->