மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி! இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.! - Seithipunal
Seithipunal


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஆஸ்திரேலியா அணியில் அதிரடியாக விளௌயாடிய அலிசா ஹீலி,138 பந்துகளில் 170 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ரேய்சால் ஹெய்ன்ஸ் 68 ரன்களும் மூனி 62 ரன்களும் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 356 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அண்யா ஷ்ரப்சோல் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

357 என்ற கடின நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World cup cricket final Australia England


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->