" ரீஎன்ட்ரி " சூர்யகுமார்..தோல்வியிலிருந்து மீளுமா மும்பை!!
Suryakumar re-entry..Will Mumbai recover from defeat!!
17வது ஐபில் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 முறை கோப்பையை வெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கியது. 2024ம் ஏலத்தில் வாங்கப்பட்ட குஜராத் அணியின் கேப்டனும் முன்னாள் மும்பை அணி வீரருமான ஹாட்ரிக் பாண்டியா வை அணியின் கேப்டனாக அறிவித்தது மும்பை அணி நிர்வாகம். கேப்டன் பதவியை தந்தால் மட்டுமே மும்பை அணிக்காக விளையாடுவேன் ஹாட்ரிக் பாண்டியா சொன்னதாக சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவியது.
ஹாட்ரிக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஏதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 6 விக்கட்டுகளை இழந்து 168 ரன்களை அடித்திருந்தது.மும்பை அணி 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.அதன்,பின்னர் நடந்த இரண்டும் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது மும்பை அணி.
இதற்க்கு, ஹாட்ரிக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பே காரணம் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் வைத்தனர். ரோஹித் சர்மாவுக்கு அணியில் மரியாதை அளிக்கப்படவில்லை என்று அவரது ரசிகர்கள் ஹாட்ரிக் பாண்டியா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
சூர்ய குமார் இல்லாதது மும்பை அணிக்கு பெரும் இழப்பாகவே இருந்தது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த சூர்ய குமார் யாதவ் மீண்டும் மும்பை அணியின் பயிச்சிக்கு வந்து இருப்பது மும்பை அணி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அணியில் சூரிய குமார் யாதவ் இடம்பெறுவர் என்று எதிர்பாக்கப்படுகிறது.
English Summary
Suryakumar re-entry..Will Mumbai recover from defeat!!