ஆஸி ஒருநாள் தொடர், இந்திய வீரர் விளையாடுவதில் சிக்கல்! ஐபிஎல் விளையாடுவதும் கேள்விக்குறி!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தற்பொழுது அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது நாள் முடிவில் முதுகுப் பகுதியில் அதிகப்டியான வலியை உணர்ந்ததையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். 

இதனை அடுத்து அவர் இந்தியாவிற்காக முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆட வரவில்லை.  அக்சர் படேல் மற்றும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி முன்னிலை பெற்றதால், அவர் ஆட வேண்டிய அவசியமும் இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனை அடுத்து  பரிசோதனைகள் செய்யப்பட்டதில் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே ஆட்டம் மிஞ்சி இருக்கும் நிலையில், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படாது என்ற சூழ்நிலையே நிலவுகிறது. அப்படியே வாய்ப்பு ஏற்பட்டாலும் அவர் இறங்க மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய காயத்தின் தன்மையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரானது 17ஆம் தேதி தொடங்க இருப்பதால், அந்த போட்டி தொடரில் இருந்து அவர் விலகலாம் என எதிர்பார்க்கலாம். அவருக்கு பதிலாக விரைவில் மாற்று வீரரை நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த ஒரு நாள் தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர் தொடங்க இருப்பதையடுத்து, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. பரிசோதனை முடிவுகள் முழுமையாக வந்து பின்னரே அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது பற்றி முழுமையாக தெரியவரும் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreyas Iyer playing doubtful for Australia ODIs


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->