ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! அடுத்தடுத்து சதம்! சாதனை படைத்த இந்திய வீரர்! - Seithipunal
Seithipunal


டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சாதனையை நேற்று பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 13 வது ஐபிஎல் சீசன் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - டெல்லி கேப்பிடல் அணியும் மோதிய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 100 ரன்கள் அடித்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் அணி வெற்றி பெற்ற போதிலும், ஷிகர் தவான் ஒரு புதிய சாதனையை ஐபிஎல் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார் மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் நேற்றைய சதத்தின் மூலம் பெற்றுள்ளார்.

ஒரு ஐபிஎல் தொடரில் 4 சதங்களை விளாசிய பெருமை விராத் கோலிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shikhar dhawan new record in ipl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->