பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட சோகம்!  - Seithipunal
Seithipunal


திறமை இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியில் போதிய வாய்ப்பு இல்லாமல் விளையாட முடியாமல் தவிக்கும் வீரர்களில் முக்கியமானவர் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன்.

இவர் அவ்வப்போது அணிக்கு திரும்புவதும் சில போட்டிகளில் ஆடுவதும் பின்னர் வெளியேறுவதுமாக தொடர்ச்சியாக ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அவருக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வெளிப்படையாகவே ஆதரவு குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். 

இந்த நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட 20 ஓவர் அணியை கட்டமைக்கும் முயற்சியில், இளம் ஹார்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்ட அணியில், சஞ்சு சங்சன் இடம் பெற்றிருந்தார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டியில் கொண்ட தொடரில், நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் ஆடினார்.

ஆனால் இந்த போட்டியில் அவர் ஐந்து ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த நிலையில், பீல்டிங் பொழுது தரை ஈரப்பதமாக இருந்ததால், கால் முட்டி தரையில் குத்தியதில், பந்தை தடுக்க முடியாமல் தடுமாறி விழுந்ததில் பவுண்டரிக்கு பந்து சென்றுவிட்டது.  

அப்பொழுது பட்ட அடியின் காரணமாக அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இரண்டாவது போட்டி நடைபெறும் புனேவிற்கு சஞ்சு சாம்சன் செல்லாமல் மும்பையிலேயே தங்கி இருக்கிறார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு அவருடைய காயத்தின் தன்மை அறியப்பட்ட பிறகே அவர் அணியுடன் இணைவாரா அல்லது காயத்துக்கு சிகிச்சை எடுப்பாரா என்பது தெரியவரும். 

தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வரும் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்தும் ஆட முடியாமல் காயம் ஏற்பட்டிருப்பது அவரது துரதிஷ்டம் தானே! எல்லாம் காலம் செய்யும் கோலம் வேறு என்ன சொல்வது!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanju samsom ind vs sl some info 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->