ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா விலகல்.?
Rohit Sharma misses some IPL matches
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல்லில் கடைசி கட்ட போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களுக்காக தயாராகும் வகையில் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Rohit Sharma misses some IPL matches