விபத்துக்கு பிறகு மைதானத்திற்கு வரும் ரிஷப் பந்த்.. டெல்லி அணி வெளியிட்ட உற்சாக செய்தி.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் லக்னோ அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியை காண டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் நேரில் வந்து காண உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ள நிலையில், தற்போது முதன்முறையாக மைதானத்திற்கு வருவதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishabh pant today arrive ground and watch DC vs GT match


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->