இந்திய அணியில் தேர்வு.. கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி.. ராகுல் திரிபாதி.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அயர்லாந்தில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து ராகுல் திரிபாதி கூறியதாவது, இது மிகப்பெரிய வாய்ப்பு. என்னுடைய கனவு நனவாகியுள்ளது. தேர்வு குழுவினர் மற்றும் அனைவரும் என்னை நம்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி. ஆடும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நான் முயற்சி செய்து என்னால் முடிந்த சிறந்ததை அணிக்கு செய்வேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Tripathi selected for Indian Team


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->