பறக்கும் தடகள வீரர் என போற்றப்பட்டவர்.. பிறந்த தினம் இன்று..! - Seithipunal
Seithipunal


மில்கா சிங்:

இந்திய தடகள விளையாட்டு வீரர் மில்கா சிங் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் பிறந்தார்.

1958ஆம் ஆண்டு கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங்.

ஒலிம்பிக் தடகளத்தில் 1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும், 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் மில்கா சிங்.

இந்திய விமானப்படை தினம்:

இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள்:

1959ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தார்.

1971ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தமிழக எழுத்தாளர் பா.ராகவன் பிறந்தார்.

1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை நிறுவப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mikha singh birthday


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->