ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை: அடுத்த டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் களமிறங்குவது உறுதி..! - Seithipunal
Seithipunal


இந்தியா-இங்கிலாந்து இடையே 05 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தது. 02-வது டெஸ்ட் பர்மிங்காமில் வரும் 02-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்த டெஸ்ட் தொடரில் பலமாக உள்ள இங்கிலாந்து அணியாய் எதிர்கொள்வதற்கு பதிலடி கொடுப்பதும் இலன் கேப்டன் சுப்மன் கில்லுக்கு சவால் நிறைந்தது.  இதற்காக எப்படியாவது இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால்பந்து வீச்சில் சிராஜுடன் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விளையாடவுள்ளனர்.

05 பந்துவீச்சாளர்களுடன் இந்திய களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த போட்டியில், ஷர்துல் தாகூருக்கு பதில் குல்தீப் யாதவ் விளையாடவுள்ளமை உறுதியாகியுள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் முதல்வரிசையில் களமிறங்கியவர்கள் அபாரமாக ஆடினர்.

அதிலும் குறிப்பாக பண்ட் இரண்டு சத்தங்கள் அடித்தமை வரலாற்று நிகழ்வானது. ஒரு அணி ஒரு டெஸ்ட் தொடரில் 05 சத்தங்கள் அடித்தும் தோல்வியை தழுவியது என்றால் அதும் நமது இந்திய டெஸ்ட் அணியாகத்தான் இருக்கும்.

முதல் டெஸ்ட்டில் தோல்விக்கு கீழ் வரிசை பேட்டிங் சரிவு தான் காரணமாக அமைந்தது. இதனை சரிசெய்யும் வகையில் முகமது சிராஜுக்கு, பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பயிற்சி அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kuldeep Yadav confirmed to play in next Birmingham Test


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->