ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்.? - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. 

இந்நிலையில், பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. நேற்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்,நேற்று நடைபெற்ற மெகா ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்கள் ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். அதன்படி,

இஷான் கிஷான் ரூ.15.25 கோடி மும்பை இந்தியன்ஸ்

 தீபக் சஹார் ரூ.14 கோடி‌ சென்னை சூப்பர் கிங்ஸ் 

ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடி கொல்கத்தா நைட்ரைடைர்ஸ்

வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 

ஹர்சல் படேல் ரூ.10.75 கோடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 

 நிக்கோலஸ் பூரனை ரூ.10.75 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

லாக்கி பெர்குசனை ரூ.10 கோடி குஜராத் டைட்டன்ஸ்

மொத்தமாக ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு 590 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.இம்முறை ஏலத்தில் எடுக்கப்படும் 590 கிரிக்கெட் வீரர்களில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், 355 பேர் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்படாத வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL Mega Auction highest sold players


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->