இவர்கள் தான் காரணம்! தோல்வி குறித்து தோனி பகிரங்க பேட்டி!  - Seithipunal
Seithipunal


பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் தொடரின் நேற்றைய 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, போட்டி முடிந்த அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

"எங்களது அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் சிங்கள் ரன்கள், பவுண்டரிகள் எடுக்காதது எங்கள் அணிக்கு தோல்வியாக அமைந்துள்ளது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். இதனால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது." என்று தோனி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 csk vs kkr match dhoni open talk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->