காமன்வெல்த் விளையாட்டு போட்டி; பளுதூக்குதலில் வெள்ளி வென்ற இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ்..! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 01 தங்கம், 03 வெள்ளி, 01 வெண்கலம் என இந்தியா இதுவரை 05 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் 04 பதக்கங்கள் பளுதூக்குதல் பாரா பவர்லிஃப்டிங்கில் கிடைத்துள்ளது. இப்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 08-ஆம் இடத்தில் உள்ள நிலையில், முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மகளிர் 53 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் 23 வயதான ஞானேஸ்வரி யாதவ் பங்கேற்றார். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் இன்றைய போட்டியில் மொத்தமாக 199 கிலோவைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார் ஞானேஸ்வரி. ஸ்னாட்ச் முறையில் 88 கிலோவையும், க்ளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவையும் தூக்கியுள்ளார்.

நைஜீரியாவின் ஓனோமே ஓமோலோலா டிடிஹ் 206 கிலோவை தூக்கி இந்த பிரிவில் முதலிடம் பிடித்தார். இது காமென்வெல்த் விளையாட்டில் சாதனையாக அமைந்துள்ளது. கனடாவின் ரெபேக்கா மூன்றாம் இடம் பிடித்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indias Gyaneshwari Yadav wins silver in weightlifting at the Commonwealth Games


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->