காட்டடி அடித்த ஷாபாலி வெர்மா! ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தல்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடனான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற, இரண்டாவது போட்டியானது இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ஷஃபாலி வர்மாவும், மந்தனாவும் அடித்து ஆடி அசத்தினார்கள். 

குறிப்பாக கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த ஷபாலி, கடந்த போட்டியில் யாருடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அவருடைய பந்துவீச்சை புரட்டி எடுத்தார். கேத்தரின் புருண்ட் வீசிய ஓவரில் 5 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசிய அவர் 48 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டாக வீழ்ந்தார். மந்தனா 20 ரன்களை எடுத்து, முதல் விக்கெட்டாக வெளியேறினார்

அதன் பிறகு வந்த ஹர்மன்பிரீத் கவுர் 25 பந்துகளில் 31 ரன்களும் தீப்தி ஷர்மா இறுதிநேரத்தில் 24 ரன்களும் எடுக்க இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்துள்ளது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வரும் நிலையில், அந்த அணி 12 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India women scored 148 in second T20 against England women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->