# || இலங்கையின் ஆட்டத்தை முடித்த அஷ்வின்., ஆட்ட நாயகன் யார் தெரியுமா? மொத்தம் 9 விக்கெட்., 175 ரன்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் 175 ரன்கள் என்ற சாதனையுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணியில் பதும் நிசாங்கா 61 ரன்கள் எடுக்க 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

400 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பந்து வீச்சால் இறுதி விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார். இலங்கை அணி 178 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து படு தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவின் முதல் இன்னிங்சில் 175 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தமாக இந்த டெஸ்ட் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளையும், 175 ரன்கள் சேர்த்துள்ளார். நிச்சயம் அவர்தான் இந்த ஆட்டத்தின் நாயகன் விருதையும் தட்டிச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs srilanka test cricket match hero 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->