இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர்.. 3வது டி20 போட்டி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று மதியம் 12 மணிக்கு நேப்பியர் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் நேப்பியர் மைதானத்தில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs NZ 3rd T20 match toss delayed due to rain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->