#Breaking: இந்தியாவின் பந்து வீச்சை பதம் பார்த்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர்.! ஆஸ்திரேலிய அணி இமாலய ரன் குவிப்பு.!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடந்தது. இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், 77 பந்துகளில், 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகினர்.

மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் 69 பந்துகளில், 60 ரன்கள் எடுத்து, முகமது சமி பந்துவீச்சில், விராட்கோலி இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி, 64 பந்துகளில், 104 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார்.

14 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்த ஸ்டீவ் ஸ்மித், ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில், மோகமத் சமீர்-டம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். லபுஸ்சேன் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 63 ரன்கள் எடுத்து இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு, 389 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி 390  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus 2nd one day 1st half


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->