வெறித்தனமாக ஆடிய ரிஷப் பண்ட்., அசத்தலான அதிரடி சதம்.! இந்திய அணி ஆல்-அவுட்.! 
                                    
                                    
                                   ind v sa test match rishap pant 100
 
                                 
                               
                                
                                      
                                            இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் கடந்த 11.1.2022 அன்று தொடங்கியது. 
டெஸ்ட் தொடரை வெல்வதற்கான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேஎல் ராகுல் 12 ரன்னுக்கும், மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து புஜாராவுடன் கைகோர்த்த விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், விராட்கோலி அசத்தலான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சில் 223 ரன்களை சேர்த்துள்ளது.
 இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சில் 210 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 13 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்கியது.
தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி  வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நூத்தி நாற்பத்தி மூன்று பந்துகளை சந்தித்து 29 ரன்களை சேர்த்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதே சமயத்தில் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து விழுந்தாலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தால் 100 ரன்களை கடந்துள்ளார். 139 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் உடன் 100 ரன்களை சற்று முன்பு எடுத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், நிலைத்து நின்று அசாத்தியமான ஒரு செஞ்சுரியை ரிஷப் பந்த் விளாசியுள்ளார்.
 இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதன் மூலம் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கி ஆடிவருகிறது. 
                                     
                                 
                   
                       English Summary
                       ind v sa test match rishap pant 100