இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் மனுவேல் ஆரோன் பற்றி உங்களுக்கு தெரியுமா?  - Seithipunal
Seithipunal


இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் என போற்றப்படும் மனுவேல் ஆரோன் 1957-1982 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 11 முறை பட்டம் வென்றுள்ளார். இதனை போன்றே 1959-1981 ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 9 முறை பட்டம் வென்றுள்ளார். 

மேக்ஸ் யூவே, லாஜோஸ் போர்டிஷ், வூல்ஃப்கேங் உல்மன், பாபி பிஷ்ஷர், போட்வைனிக் போன்ற சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் விளையாடி அர்ஜுனா விருதை வென்றுள்ளார். இவர் மூன்று ஒலிம்பியாடில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

இவர் செஸ் விளையாடியதோடு நின்று விடாமல், இந்தியாவில் சர்வதேச செஸ் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட போட்டியை பிரபலப்படுத்தினார். இதற்காக நிறைய செஸ் குழுக்களை சர்வதேச தரத்தில் அமைத்துள்ளார். 

இதனை தொடர்ந்து மனுவேல் ஆரோன் தமிழ்நாடு செஸ் சங்கத்தின் செயலாளராகவும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவராகவும் இயங்கியுள்ளார். மேற்கொண்டு இவர் சதுரங்கம் குறித்த செய்திகளை வழங்கும் ‘செஸ் மேட்’ எனும் இதழை நிறுவி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

father of Indian chess Manuel Aaron


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->