இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுவார் என தினேஷ் கார்த்திக் பாராட்டு!
Dinesh Karthik praises that he will be part of the Indian cricket team
துலீப் கோப்பையின் இறுதி போட்டியானது கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்மண்டல அணியில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பாபா இந்திரஜித் மற்றும் சாய் கிஷோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்ததற்கு விக்கெட் கீப்பர் ஹெட் பட்டேல் 98 ரன்கள் எடுத்திருந்தார். சாய் கிஷோர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தென்மண்டல அணியானது 255 தங்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென் மண்டல அணிக்காக விளையாடிய பாபா இந்திரஜீத் சதம் அடித்தார். ரஞ்சித் கோப்பை போட்டியில் விளையாடிய இவர் மூன்று ஆட்டங்களில் மூன்று சதம் மற்றும் ஒரு அரை சதம் என 396 ரன்கள் எடுத்திருந்தார். துலீப் கோப்பை இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து அனைவரின் பார்வையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் துலீப் கோப்பையின் தீவிரமான இறுதி ஆட்டத்தில் அபாரமான வீரர்களும் இருந்து தரமான சதம். இதுவரை ஒரு முதல் தரப்பு கிரிக்கெட்டின் என்ன ஒரு சாதனை. இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கலாம் நன்றாக விளையாடி நீங்கள் பாபா இந்தரஜீத் என செய்தி இருந்தார்.
திறமை வாய்ந்த இந்த வீரர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.
English Summary
Dinesh Karthik praises that he will be part of the Indian cricket team