INDvsPAK | இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு வந்த எச்சரிக்கை மணி!
ASIA CUP 2023 INDvsPAK sourav ganguly WARN TO TEAM INDIA
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில், பாகிஸ்தானும், இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது.
நாளை நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது லீக் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிகாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பகிஸ்தான் அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளதால், இந்திய வீரர்கள் சூதனமாக ஆட வேண்டும் என்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவரின் பேட்டியில், “பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவ்ஃப் என மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சு உள்ளது.
எனவே, பாகிஸ்தான் அணியின் இந்த சிறந்த பந்துவீச்சு தாக்குதலை இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நாளை ஆடவுள்ள பாகிஸ்தான் அணி :
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (vc), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (wk), முஹம்மது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி - கணிப்பின்படி :
இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரோகித் சர்மா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ASIA CUP 2023 INDvsPAK sourav ganguly WARN TO TEAM INDIA