சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவில் தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த மே மாதம் 14 ஆம் தேதி மாலை 5.30  மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி  நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் 19ஆம் தேதி பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்பட்டது.

 பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 9 தேதி பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அன்று இரவு 10.30  மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஐயப்பன் பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today evening open to sabarimala temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->