பெருமாளின் இந்த அவதார வழிபாடு வாழ்வில் சகல செல்வங்களும் கிட்டும்..!
Perumal Workship
திருமாலின் கூர்ம அவதாரத்தை வழிப்பட்டு வந்தால் வாழ்வில் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்து சமய நம்பிக்கை படி கூர்ம அவதாரம் பகவான் மாகவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகும். சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைகையில், விஷ்ணு, ஆமை உரு எடுத்து பிடிமானமாக இருந்தார் என்பது வரலாறாகும்.

கூர்ம அவதாரத்தை வழிப்பட்டால் திருமாலின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
“ஓம் தராதராய வித்மஹ
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்”
இந்த மந்திரத்தை பூஜையின் போது சொல்லி வழிப்பட்டு வர திருமாலின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கூர்ம அவதார வழிப்பாடு வாழ்வை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக மாற்றும்.