மற்றவர்களின் மனம் அறிந்து செயல்பட்டும் ராசிக்காரர்களே.. தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்.! - Seithipunal
Seithipunal


சுபகிருது வருடம் 2022-2023.. தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்

மற்றவர்களின் மனம் அறிந்து செயல்பட்டு தனது காரியத்தை வெற்றியாக்கி கொள்ளும் மகர ராசி அன்பர்களே!!

பலன்கள் :

விடாமுயற்சியின் மூலமாக இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். சொகுசு வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். தடைபட்ட திருமண பேச்சுவார்த்தை கைகூடி வரும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் விடாப்பிடியாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள்.

ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :

எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கங்கள் மற்றும் தடுமாற்றங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு :

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் நண்பர்களுடன் நெருக்கத்தை குறைத்து கொள்வது நன்மையை உண்டாக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். உயர்கல்வி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணியில் எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். எதிர்பாராத சில செலவுகளால் விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நிறுவனங்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :

நிலுவையில் இருந்த சரக்குகளை சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் விற்று தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய முதலீடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வியாபார ஸ்தலங்களை மாற்றுவதற்கான சூழ்நிலைகள் கைகூடும்.

விவசாயிகளுக்கு :

விவசாய பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். செயற்கையான உரங்களை தவிர்த்து இயற்கை முறையிலான விவசாயத்தை மேற்கொள்வது நல்ல மாற்றத்தை உருவாக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களுக்கு இடையே அவ்வப்போது பனிப்போர் ஏற்பட்டு நீங்கும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு உண்டான முன்னேற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களில் இருந்துவந்த கவனக்குறைவுகள் நீங்கும். இசை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் காணப்படும்.

ஆலோசனை :

உணர்ச்சிவசப்படாமல் எந்தவொரு செயலிலும் விவேகத்துடன் செயல்படவும்.

வழிபாடு :

ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர மனதில் அமைதியும், தெளிவும் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Magara rasi Tamil new year Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->