காணும் பொங்கலின் சிறப்பு ராசிபலன்கள்.! இன்றைய (16-01-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு மேம்படும்.  எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பயணம் நிறைந்த நாள்.

ரிஷபம்

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம்

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தாமதமான நாள்.

கடகம்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். லாபகரமான நாள்.

சிம்மம்

புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை ஏற்படும். மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

துலாம்

நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். தனவரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து செல்லவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

தனுசு

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மையான நாள்.

மகரம்

நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செலவுகள் நிறைந்த நாள்.

கும்பம்

பயணங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். மனைகளை விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

மீனம்

மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanum pongal Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->