கைரேகை சாஸ்திரம்.. உங்கள் கையில் இந்த குறி இருக்கிறதா?
kairegai palan 33
நம்முடைய கைகளில் இருக்கக்கூடிய ரேகைகளில் தெரியும் சின்னங்களுக்கு என்ன அர்த்தம்? என்பதை பற்றியும், அந்த சின்னங்களை கொண்டவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்? என்பதை பற்றியும் பார்ப்போம்.
நட்சத்திரங்கள்
வெட்டுகள்
முக்கோணங்கள்
சதுரங்கள்
திரிசூலங்கள்
உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றன.
உள்ளங்கையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும், பாதிப்புகளும் கணிக்கப்படும்.
திரிசூலம் :
ஒருவரது கையில் திரிசூலம் இருந்தால் மிகவும் ராசியானவர் என கூறப்படுகிறது.
முக்கோணங்கள் :
ஒருவரது கையில் முக்கோண அடையாளம் இருந்தால் அது நேர்மறையான ஆற்றலை குறிக்கும்.
சங்கிலிகள் :
ஒருவர் கையில் சங்கிலிகள் போன்ற அடையாளங்களை இருந்தால் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை குறிக்கும்.
ஓ குறி :
கையில் ஓ குறி உள்ளவர்கள் மிகவும் வலிமை பொருந்திய குணம் கொண்டவர்களாகவும், வெற்றி என்ற பாதையில் பயணிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
நட்சத்திரங்கள் :
ஒருவர் கையில் நட்சத்திர வடிவிலான அடையாளம் கொண்டிருந்தால் அவரின் எதிர்காலத்தை குறிக்கும்.
கூட்டல் குறி :
கூட்டல் குறி கைகளில் கொண்டவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
மீன் சின்னம் :
மீன் சின்னமானது கைரேகையில் இருந்தால், அவர்கள் விஷ்ணுவின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்கள் என்று சொல்லலாம்.யோகங்கள் என்பது ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை நிலைகளை குறிப்பிடுகின்றன. அப்படியென்றால் உங்கள் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் உண்டு? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.