ஜென்ம நட்சத்திர அதிர்ஷ்டத்தை பெருக செய்யும் தாண்டிக்குடி ஹோமம்..! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


சத்ரு சம்கார ஹோமம் (19-08-2022)

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் தாண்டிக்குடி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. போகர் முனிவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருளியதுபோல, இங்கு கற்பக மகாமுனிவருக்கு காட்சி தந்தருளிய தலம் இதுவாகும்.

ஒருமுறை இங்கு வருகை புரிந்த பன்றிமலை சாமியார் என்ற மகான், ஓரிடத்தை சுட்டிக்காட்டி 'இது முருகப்பெருமான் வாசம் செய்யும் இடம் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் கட்டுங்கள்" என்றார். அதனை அந்த ஊர் மக்கள் பொருட்படுத்தவில்லை. அதற்கடுத்த சில நாட்களில் தாண்டிக்குடி மலையில் மூன்று நாட்கள் தொடர்ந்து அனைவரும் பார்க்கும்படி ஓர் ஜோதி தோன்றியது. ஜோதி தெரிந்து முடிந்தவுடன், அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, முருகப்பெருமான் கால்பதித்த திருவடிச்சுவடு காணப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிறகே இங்கு ஆலயம் அமையப்பெற்றது. மேலும் முருகனின் வேலும், அவரின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும், வற்றாத சுனையும் இன்றளவும் காணப்படுகின்றது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த திருத்தலத்தில் கந்தனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரமும், பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்தே வருகின்ற சிறப்பான நாளில்

சத்ரு சம்கார ஹோமம்

27 நட்சத்திர சாந்தி மற்றும் நவகிரஹ ஹோமம்

ஸ்ரீகாலபைரவர் ஹோமம்

அன்னதானம் ஆகியவை பக்தர்களின் பங்களிப்போடு நடைபெற உள்ளது.

நடைபெறும் நாள் : 19-08-2022

நடைபெறும் இடம் : தாண்டிக்குடி முருகன் கோவில், திண்டுக்கல், தமிழ்நாடு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jenma natchathiram adhurshta homam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->